Tuesday, May 22, 2012

2012 12th Results

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து முடிந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த முடிவின்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவி சுஸ்மிதா முதலிடத்தையும், 2 வது , 3 வது இடத்தையும் நாமக்கல் மாவட்ட மாணவிகளே பிடித்தனர். தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டார். www.worldcolleges.info இணையதளத்தில் ரிசல்ட்டுக்காக பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தகவல் போய்ச்சேர்ந்தது.


கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த தேர்வில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் எழுதினர். முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும் ஒட்டப்பட்டன. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.


முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்: முதல் ரேங்க், சுஸ்மிதா ( 1189 மார்க்குகள்) எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி , நாமக்கல், இரண்டாமிடம் ; கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேரும் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர், நாமக்கல், 3 ம் இடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களையும் மொத்தமாக நாமக்கல் மாவட்டம் அள்ளியது.




Thanks to dinamalar

Saturday, April 28, 2012

Tancet Results 2012

Tancet Results 2012 - Click Here

Thursday, April 12, 2012

Lotus Temple

தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் டெல்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. 

   1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக டெல்லியில் உள்ள பாஹாய் வழிப்பாட்டுத்தளம் திறந்து வைக்கப்பட்டது. இதுமுதல், 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை இங்கு 50 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக உலகில் மிகவும் அதிகமாக வருகை தரப்பட்ட கட்டடங்களில் இதுவும் ஒன்றானது.இதனுடைய புகைப்படங்கள் சில 







6.50 ரூபாய் தபால் அஞ்சல்தலைகளானது இந்தியாவில் புதுதில்லியில் உள்ள பாஹாய் வழிபாட்டுத்தளத்தைக் கொண்டுள்ளன